Posts

Showing posts from December, 2013

பீமனும் ஹனுமனும்

Image
இன்று என் நன்பன் பார்த்தாவுக்கும் எனக்கும் என் அப்பா நிரைய புத்தகஙள் வாங்கிவந்தார். அதில் நான் புத்தகங்களை share செய்து கொண்டேன். அதில் நான் ஒரு புத்தகத்தை படித்தேன். அந்தக் கதையின் பெயர் பீமனும் ஹனுமனும். அந்த புத்தகத்தின் பப்ளிஷர் பெயர் அமர்சித்ரகதா. அந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அது மாணவர்களின் புத்தகம். அதில் எனக்கு பிடித்திருந்த கேரக்டர் ஹனுமன். இது ஒரு காமிக் புத்தகம். இந்த புத்தகத்தில் படங்கள் நன்றாக இருந்தன.  

அடுத்த புத்தகம்

Image
நான் ஆழ்கடலில் ஒரு சாகச பயணம் என்று ஒரு புத்தகத்தை படித்தேன். அந்தக் கதை நன்றாக இருந்தது. அந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தக் கதையில் ஒரு கப்பல் மூழ்கிவிட்டது.பக்கத்தில் ஒரு கப்பல் வந்தது.அதில் அவர்கள் ஏறிக்கொண்டனர்.அந்தக் கப்பலில் உள்ள கேப்டனை சந்தித்தனர்.ஆனால் அந்தக் கப்பலில் உள்ள கேப்டன் அவர்களை கரைக்குச் செல்லக்கூடாது சென்றால் எங்களைப் பற்றிய விவரங்களை சொல்லிவிடுவீர்கள் என்றான். அந்தக் கதையில் கேப்டனுடய பெயர் நெட். அந்தக் கதையில் ஆக்டோபஸ்தான் வில்லன். கடைசியில் அவர்கள் கேப்டன் நெட்டுக்கு தெரியாமல் தப்பித்துவிட்டார்கள்.

அந்திரத்தில் நடந்த அபூர்வக் கதை

Image
நான் அந்தரத்தில் நடந்த அபூர்வக்கதை படித்தேன். எனக்கு இந்த கதை மிகவும் பிடித்திருந்தது. இந்த கதையில் நிலாவை திகிலோ திகாதா என்ற வால் நட்சத்திரம் கொல்லப்போவதாக அதில் எழுதியுள்ளார்.  ஆனால் இந்தக் கதையில் திகிலோ திகாத என்ற வால்நட்சத்திரம் நிலாவை கொல்ல வில்லை. இந்த கதையில் சரணும்,யாங்கும்,நிலாவும் தான் ஹீரோ. இந்தக் கதையில் பட்டத்தை விட்டு சரண் நிலாவை அடைந்தான். யாங் ராகெட்டில் வந்தான். அவன் ராகெட்டில் வந்தபோது ராகெட்டில் இருக்கும் பெட்ரோல் காலியானதால் ராகெட் விழுந்துவிட்டது. இவன் விழும்போது ஒரு நட்சத்திரத்தின் காலை பிடித்துக்கொண்டான். பிறகு இவன் ஹெல்ப் ஹெல்ப் என்று கத்தினான். இதை பார்த்த சரணும் நிலாவும் யாங்கை காபாற்றிவிட்டார்கள். பிறகு யாங்கும் சரணும் நிலாவும் நண்பர்கள் ஆனார்கள். பிறகு சரணும் யாங்கும் எல்லா நட்சத்திரங்களுக்கும் colour அடித்தார்கள். இந்த புத்தகத்தை வாங்கிக்கொடுத்த குமார் மாமாவுக்கு நன்றி.